Tuesday, September 9, 2014

ஓவியப் போட்டி பாராட்டு விழா


                                                 திருச்சி தில்லைநகரில் உள்ள LIC  நிறுவனம் நடத்திய 
     
ஓவியப் போட்டியில் என்மகள் ரக்ஷீத ப்ரியா வெற்றி பெற்றதற்கு நடைபெற்ற

 பரிசளிப்பு விழா .

  நாள் :08-09-2014


















































Thursday, August 28, 2014

PALANIVELU ITI KANDACHIPURAM

        கூவும் குயில் சித்ரா 

அன்பானவர்களே ,
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் அமைந்துள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையமான பழனிவேலு ஐடிஐயில்  ( PALANIVELU ITI ) 
எலெக்ட்ரிகல் தொழிற்பிரிவில் சென்ற ஆண்டு படித்து முடித்த மாணவியான 
செல்வி E.சித்ரா அவர்களின் இந்த இனிமையான குரலை கேட்டு மகிழுங்கள் .
உங்கள் கருத்துகளை தெரிவிக்க 
தொடர்புக்கு ;
PRINCIPAL
PALANIVELU ITI
KANDACHIPURAM
VILUPURAM DT
PH:9442477084
mail id : parithi.vpm@gmail.com

              

Wednesday, August 13, 2014

பெண் குழந்தை வளர்ப்பு


பெண் குழந்தை வளர்ப்பு
குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக்
கொடுக்க வேண்டியவைகள்....!!
1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும்
அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க
வேண்டும்.
2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள்
முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத்
தவிர்க்க வேண்டும்.
3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய
கணவன் என்றோ,
மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில்
பதிய வைப்பதோ தவறு.
4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள்
பார்வை அவர்கள்
மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும்
அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும்
கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால்
குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல்
துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.
5. உங்கள் குழந்தையால் சரியாக
பொருந்தியிருக்க முடியாத
நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள்
அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.
6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய
ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது
பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக்
கேட்டு அவர்களின்
பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.
7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும்
அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள்.
இல்லையென்றால், சமுதாயம்
அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக்
கற்றுக் கொடுத்துவிடும்.
8.குழந்தைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக
நாம் அறிந்து கொண்டு அவர்கள்
கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக்
கொடுத்துவிட வேண்டும்.
9. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும்
இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற
சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம்
செயலிழக்கச்
செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக்
கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள்
அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும்
இதை செய்து வைக்க
அறிவுருத்துவது நல்லது.
10. 3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள்
உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய
கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப்
பகுதிகளை பிறர் யாரும்
தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என
எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும்
அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால்,
அவசியமற்ற உதவிகளை செய்யும்
போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது
11. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய
அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக்
கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில்
இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும்
அடங்கும்.
12. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள்
குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித்
திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.
13. குழந்தை ஒருவரைப்
பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே,
அதை கவனிக்கத் தொடங்குங்கள்.
கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம்.
நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள்
என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.
மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும்;
அது நாம் பெற்றோராக இருந்தாலும்
சரி அல்லது பெற்றோராகப் போகிறவராக
இருந்தாலும் சரி!
நண்பர்கள் இதை விரும்பினால் ஷேர் செய்யுங்கள்.
****************************************
LikeLike ·  · 

Saturday, August 9, 2014

6 ஆம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவன், ஐ.ஏ.எஸ். தேர்வில் முதலிடம்


6 ஆம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவன், ஐ.ஏ.எஸ். தேர்வில் முதலிடம் ............
.
Dyselexia (கற்றல் குறைபாடு) காரணமாக படிப்பு சரியாக ஏறாததால் ஆறாம் வகுப்பிலிருந்து பள்ளிப் படிப்பை நிறுத்திய நந்தகுமார் அதற்கு பிறகு, லாட்டரி விற்பது, டூ-வீலர் மெக்கானிக் ஷாப்பில் எடுபிடி வேலை, அடுத்து ஜெராக்ஸ் கடை, பின்னர் டி.வி.- ரேடியோ மெக்கானிக், சவுண்ட் சர்வீஸ் உதவியாளர், அதற்கு பிறகு ஐஸ்-க்ரீம் விற்பனையாளர் என்று பல்வேறு வேலைகள் பார்த்தார்.
.
இடையே 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ப்ரைவேட்டாக எழுதி பாஸ் ஆனார். பின்னர் பல போராட்டங்களுக்கு பின்னர் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதினார்.
.
இறுதியில் மத்திய அரசின் UPSC தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.
.
தற்போது சென்னை வருமான வரித் துறை அலுவலகத்தில் துணை ஆணையாளராக பணிபுரிகிறார்.
.
நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி… எப்படி இருந்தாலும் சரி… எவ்வளவு கீழே இருந்தாலும் சரி… உங்களுக்கு இன்னும் வாய்ப்பிருக்கிறது. மிகப் பெரிய வாய்ப்பு.;
.
“எங்கே இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல என்னவாக நினைக்கிறீர்கள் என்பது தான் முக்கியம்"

Saturday, July 26, 2014

தெரிந்து கொள்வோம் சின்னப்பிள்ளை அம்மாள்..!


இந்தியப்பிரதமரே அவர் காலில் விழுந்து
ஆசி வாங்கிய பெருமை ......
தெரிந்து கொள்வோம்
சின்னப்பிள்ளை அம்மாள்..!
அன்றாடம் கூலி வேலையும், விவசாயமும் செய்து கொண்டிருந்த சின்னபிள்ளை, சரியான கூலி தராமல் ஏமாற்றும் பண்ணை முதலாளிகளை தட்டி கேட்கலானார். அவருடைய தைரியத்தின் மூலம் அவருக்கு சரியான கூலி தரப்பட்டது. ஆகவே இவரின் கூட இருந்தால், நமக்கும் சரியான கூலி கிடைக்கும் என்று பல பெண்கள் அவருடன் இணைந்தனர், இவ்வாறு அவர்களுக்கெல்லாம் சிறு தலைவியாக விளங்கினார்.
பின்பு "Dhan Foundation" எனும் சேவை அமைப்பின் மூலம் உருவான "களஞ்சியம்" எனும் அமைப்பில் 1989 ஆம் ஆண்டு சாதாரண உறுப்பினராக சேர்ந்து, இன்று அதனுடைய முக்கிய செயலராக விளங்கி கொண்டிருக்கிறார். "களஞ்சியம்" என்பது சிறுசேமிப்பை வலியுருத்தும் ஒரு சேவை அமைப்பு.
அன்றாடம் கூலி வேலை செய்யும் பெண்களிடையே சேமிப்பின் மேன்மையை வலியுறுத்தி "களஞ்சியத்தை" விரிவுபடித்தியவர்.இதனால் பலனடைந்த குடும்பங்கள் பல.
பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில் "ஆரம்பத்தில் பத்து பேரிடம் இருந்து தலா இருபது ரூபாய் பெறப்பட்டு, இப்பொழுது, இந்தியா முழுவதும் சுமார் நான்கு லட்சம் உறுப்பினர்களை கொண்டுள்ளது களஞ்சியம். மொத்த சேமிப்பு தொகை நூறு கோடியை எட்டி இருக்கிறது" என்றார்.
இவருடைய சேவையை பாராட்டி இந்திய அரசு "ஸ்திரீ சக்தி" விருதும் தமிழக அரசு "பொற்கிழி விருதும்" வழங்கி கவுரவித்தது. பிரதமரிடம் (வாஜ்பாய்) விருது வாங்கும் பொழுது, இந்தியப்பிரதமரே அவர் காலில் விழுந்து ஆசி வாங்கிய பெருமை சின்னப்பிள்ளை அம்மாள் அவர்களையே சாரும்......

Sunday, July 20, 2014

சுவாமிகள் உதங்க மாமுனிவர் .


                         வேண்டுபவர்களுக்கு வேண்டுதலையும்,               
                    கேட்பவர்களுக்கு கேட்பதையும்                                          
                                   அள்ளிக்  கொடுப்பவர் 
                     
                    திருச்சி உறையூர் பஞ்சவர்ணசாமி கோயிலில் அமர்ந்து இருக்கும் 
                            
                        சுவாமிகள்  உதங்க மாமுனிவர் .



Followers

J.ELANGOVAN.TRICHY