Wednesday, June 7, 2017

PENCIL DRAWING - Rabindranath Tagore

PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 09-05-2017

                     Rabindranath Tagore


PENCIL DRAWING - Rabindranath Tagore
PENCIL DRAWING - Rabindranath Tagore

PENCIL DRAWING - Rabindranath Tagore
PENCIL DRAWING - Rabindranath Tagore

PENCIL DRAWING - Rabindranath Tagore
PENCIL DRAWING - Rabindranath Tagore




காலவரிசை

1861: கல்கத்தாவில் ஒரு பணக்கார பிராமண குடும்பத்தில் மே 7, 1861 அன்று பிறந்தார்.

1873: பூணூல் சடங்கிற்குப் பின், 14 பிப்ரவரி 1873 ஆம் ஆண்டு தகப்பனாருடன் கல்கத்தாவை விட்டுப் புறப்பட்டார்.

1874: அவரின் கவிதையான ‘அபிலாஷ்’ (ஆசை), தட்டோபோதினி என்ற ஒரு பத்திரிகையில் அநாமதேயமாக வெளியிடப்பட்டது.

1875: அவரது தாயார் சாரதா தேவி காலமானார்.

1878: முதல் கவிதைப் புத்தகமான ‘கபி கஹினி’ (ஒரு கவிஞர் கதை)வெளியிடப்பட்டது.

1878: சட்டம் பயில்வதற்காக கடல்வழியாக இங்கிலாந்து சென்றார்

1880: கவிதைகளை ஆராய்வதில் ஆர்வம் காட்டியதால், பட்டம் பெறாமலேயே வங்கத்திற்குத் திரும்பிவிட்டார்.

1883: டிசம்பர் 9ஆம் தேதி, 1883ஆம் ஆண்டில் மிருனாலி தேவி ராய்சௌத்ரி என்ற 10 வயதுப் பெண்ணை மணந்தார்

1884: ‘கோரி-ஓ-கமல்’ (ஷார்ப் மற்றும் பிளாட்) என்ற கவிதைத் தொகுப்பை எழுதினார். 1890:தனது குடும்ப எஸ்டேட்டைப் பார்த்துக்கொள்ள சிலைதஹாவிற்கு (இப்போது வங்காளத்தில் உள்ளது) சென்றார்.

1893–1900:  தாகூர் அவர்கள் ஏழு கவிதைத் தொகுதிகளான ‘சொனார் தொரி’ (கோல்டன் படகு) மற்றும் ‘கனிகா’ போன்றவற்றை எழுதியுள்ளார்.

1901: பங்கதர்ஷன் என்ற இதழின் ஆசிரியரானார்.

1902: அவரது மனைவி மிருணாளினி இறந்தார்.

1909:‘கீதாஞ்சலியை’ எழுதத் தொடங்கினார்.

1912: இரண்டாவது முறையாக ஐரோப்பா சென்றார்.

1912: லண்டனில் உள்ள இந்திய சமூகத்தின் ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்பில் கீதாஞ்சலி வெளியிடப்பட்டது.

1913: கீதாஞ்சலிக்கு, இலக்கியத்துக்கான ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது.

1915:ஆங்கிலேய ஜார்ஜ் மன்னர், ‘சர்’ என்னும் வீரப்பட்டம் வழங்கினார்.

1919: ஜாலியன்வாலா பாக் படுகொலையைத் தொடர்ந்து, ஆங்கிலேய ஜார்ஜ் மன்னர்‘சர்’ என்னும் வீரப்பட்டத்தைத் துறந்தார்.

1916 –1934: சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

1921:விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார்.

1940:சாந்திநிகேதனிலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ‘இலக்கிய முனைவர் பட்டம்’ வழங்கப்பட்டது.

1941: கல்கத்தாவிலுள்ள தனது மூதாதையர் வீட்டில் ஆகஸ்ட் 7, 1941 அன்று காலமானார்.

Wednesday, May 10, 2017

PENCIL DRAWING - KARL MARX

PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 09-05-2017


PENCIL DRAWING -  KARL MARX
PENCIL DRAWING -  KARL MARX

PENCIL DRAWING -  KARL MARX
PENCIL DRAWING -  KARL MARX

காரல் மார்க்ஸ் 
என் வரைச்சித்திரம், சிந்தனைத்துளிகளுடன் அனைவருக்கும் காலை வணக்கம்...
உழைப்பு தான் எல்லா செல்வங்களுக்கும் மதிப்பளிக்கும் மூலம்.
மக்கள் இன்பமான வாழ்க்கை வாழவேண்டுமா? முதலில் மதங்களை ஒழித்துக் கட்டுங்கள்.
மனிதன் என்பதற்கு மேலான எந்தக் கவுரவமும் இல்லை.
நல்ல குறிக்கோளை அடைவதற்காக தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாகிறது.
உன்னால் எதைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நம்புகிறாயோ அதைத் தீவிரமாகச் செய்து முடிக்க முயற்சி செய். அதுவே வெற்றி பெற உற்ற வழி.
பிழையை எடுத்துக் காட்டாமல் விடுவதானது. அறிவுத் துறையிலே ஒழுக்கமின்மையை ஆதரிப்பதாகும்.
தலைவணங்குவதையும் கெஞ்சுவதையும் நான் பெரிதும் வெறுக்கிறேன்.
மிகப்பெரிய தோல்வியை விடவும் மிகப்பெரும் வெற்றிக்கே நாம் மிகவும் அஞ்ச வேண்டும்.
மதம் மக்களுக்கு அபின்.
விஞ்ஞானம் என்னும் அழியா ஒளி அறியாமை என்னும் திரைக்குப் பின்னே பிரகாசிக்கிறது.
உலகாயதத்தை மனிதனின் மனம் கிரகித்து அதனைச் சிந்தனை வடிவமாக மாற்றுவது தான் எண்ணம் ஆகும்.
ஒருவன் தனக்காக தன்னுடைய வாழ்க்கைக்காக உழைக்கும்போது தான் அசலான மனிதனாகிறான்.
நாம் வீணாகக் கழிக்கும் ஒவ்வொரு நொடியும் நமது வாழ்வில் மீண்டும் நாம் பெற முடியாத பெருஞ்செல்வமாகும்.
மக்களே கலை, இலக்கியம், மொழி ஆகிய அனைத்துக்கும் வித்தும் வீரியமும் சத்தும் சாரமுமாய் இருக்கிறார்கள். அவர்களே வரலாற்றைப் படைக்கிறார்கள்.
நமக்கு முந்தைய தலைமுறை தத்துவ தலைமுறை தத்துவ ஞானிகள் உலகத்தைப் பற்றி வியாக்யானம் செய்தார்கள். ஆனால் தத்துவ ஞானிகளின் உண்மையான வேலை உலகை மாற்றுவதுதான்.
உள்நாட்டில் பல வகுப்பினரிடையே உள்ள வர்க்கப் பகைமை மறைகிற அளவை பொறுத்து. நாடுகளுக்கிடையே உள்ள பகைமையும் ஒரு முடிவுக்கு வந்து விடும்.
மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை. மாற்றங்களை எதிர்கொள்ள மன உறுதி வேண்டும். மாற்றம் என்பதைத் தவிர மாறாதது உலகில் இல்லை.

PENCIL DRAWING - Sachin Tendulkar

PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 06-05-2017


PENCIL DRAWING - Sachin Tendulkar
PENCIL DRAWING - Sachin Tendulkar

PENCIL DRAWING - Sachin Tendulkar
PENCIL DRAWING - Sachin Tendulkar

24-04-2017 அன்று பிறந்தநாள் கண்ட சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு என் கைச்சித்திரத்துடன் வாழ்த்துக்கள்...
THE HINDU...
அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* மும்பையில் நடுத்தரக் குடும்பத்தில் (1973) பிறந்தவர். தந்தை ரமேஷ் டெண்டுல்கர் மராத்திய எழுத்தாளர். தன் மனம்கவர்ந்த இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மனின் பெயரை மகனுக்கு சூட்டினார்.
* அண்ணனின் வழிகாட்டுதலால் கிரிக்கெட் பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கரிடம் பயிற்சி பெற்றார். பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யா மந்திர் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பள்ளிகளுக்கு இடையேயான போட்டி ஒன்றில் இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ரன்கள் குவித்தனர்.
* மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் முதன்முதலாக 15-வது வயதில் விளையாடி 100 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறங்கி, 16-வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார்.
* இவரைக் களத்தில் பார்த்த எதிரணி பவுலர்கள் ‘பொடியன்’ என்றார்கள். அந்த பொடியன் பிற்காலத்தில் அவர்கள் அனைவரது பந்துவீச்சையும் பொடிப் பொடியாக்கியதை கிரிக்கெட் வரலாறு பெருமிதத்துடன் பதிவு செய்தது. இங்கிலாந்துக்கு எதிராக 1990-ல் முதல் சதம் அடித்து, சாதனைக் கணக்கை தொடங்கினார்.
* தொடர்ந்து 24 ஆண்டுகளாக விளையாடியவர், அதுவரை கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்தார். டெஸ்ட் போட்டியில் 13 முறை, ஒருநாள் போட்டியில் 60 முறை ஆட்ட நாயகன் விருது பெற்றார். 4 முறை டெஸ்ட் போட்டிகளிலும் 14 முறை ஒருநாள் போட்டிகளிலும் தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* உலகக் கோப்பை (1996) போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமைக்குரியவர். சென்னை சேப்பாக்கத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதுகுவலியுடன் ஆடி 136 ரன்களைக் குவித்தார்.
* 200 டெஸ்ட் போட்டிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 18 ஆயிரம் ரன்கள், சர்வதேசப் போட்டிகளில் 100 சதம் என ஏராளமான சாதனைகளைப் படைத்தவர். 2010-ல் குவாலியரில் சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 200 ரன்களைக் குவித்து உலக கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்தார். பந்துவீச்சிலும் வல்லவர்.
* ஆட்டத்தில் காணப்படும் ஒழுங்கு, துல்லியம், நேர்த்தி, தனித்துவம் வாய்ந்த பாணி இவற்றால் இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளத்தை வசப்படுத்தியவர். இவரது பெயரில் காமிக்ஸ்கள்கூட வெளிவந்தன.
* மாநிலங்களவை நியமன உறுப்பினராக 2012-ல் தேர்ந்தெடுக் கப்பட்டார். பத்மவிபூஷண், பத்மஸ்ரீ, அர்ஜுனா, ராஜீவ்காந்தி கேல் ரத்னா, இந்திய விமானப் படையின் கவுரவ கேப்டன் என ஏராளமான விருதுகள், கவுரவங்களைப் பெற்றுள்ளார். 2014-ல் ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது. அதே ஆண்டில் இவரது ‘பிளேயிங் இட் மை வே’ என்ற சுயசரிதை நூல் வெளிவந்தது. 200-வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றார்.
* கிரிக்கெட் சாதனையாளரான சச்சின் இன்று 43-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். ‘தூய்மை இந்தியா’ இயக்கத்தின் தூதராக இருந்து, மும்பை மாநகரை தூய்மைப்படுத்தி வருகிறார். மும்பை குடிசைவாழ் மக்கள் நலவாழ்வு, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு ஆகிய பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார்.

http://m.tamil.thehindu.com/…/சச்சின்-டெ…/article8516011.ece

PENCIL DRAWING - MOTHER

PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -01-05-2017

PENCIL DRAWING - MOTHER
PENCIL DRAWING - MOTHER

PENCIL DRAWING - MOTHER
PENCIL DRAWING - MOTHER


PENCIL DRAWING - velankanni church

PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -27-04-2017


PENCIL DRAWING - velankanni church
PENCIL DRAWING - velankanni church



PENCIL DRAWING - velankanni church
PENCIL DRAWING - velankanni church

PENCIL DRAWING - POOMALAI

PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -30-04-2017



PENCIL DRAWING - POOMALAI

PENCIL DRAWING - POOMALAI
PENCIL DRAWING - POOMALAI


எங்கள் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிபுரியும் அன்பு நண்பர் திரு .பூமாலை நடேசன் .ATO Poomalai Natesan அவர்களின் 54 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவிற்கு ( 30-04-2017 ) என் வரைச்சித்திரத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் ...

PENCIL DRAWING - Actress Kajal Aggarwal

PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -30-04-2017


PENCIL DRAWING - Actress Kajal Aggarwal
PENCIL DRAWING - Actress Kajal Aggarwal

PENCIL DRAWING - Actress Kajal Aggarwal
PENCIL DRAWING - Actress Kajal Aggarwal


Followers

J.ELANGOVAN.TRICHY