Wednesday, June 7, 2017
PENCIL DRAWING - SIVARAMA KRISHNAN
PENCIL DRAWING
தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 09-05-2017
PENCIL DRAWING - SIVARAMA KRISHNAN |
PENCIL DRAWING - SIVARAMA KRISHNAN |
எங்கள் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று தற்சமயம் மத்திய அரசு பணி HAPP ல் பணியாற்றும் எங்கள் அருமை நண்பர்
திரு சிவராம கிருஷ்ணன் Sivarama Krishnan அவர்களை என் வரைச்சித்திரத்துடன் வாழ்த்துகிறேன்....
PENCIL DRAWING - Rabindranath Tagore
PENCIL DRAWING
தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 09-05-2017
PENCIL DRAWING - Rabindranath Tagore |
PENCIL DRAWING - Rabindranath Tagore |
PENCIL DRAWING - Rabindranath Tagore |
காலவரிசை
1861: கல்கத்தாவில் ஒரு பணக்கார பிராமண குடும்பத்தில் மே 7, 1861 அன்று பிறந்தார்.
1873: பூணூல் சடங்கிற்குப் பின், 14 பிப்ரவரி 1873 ஆம் ஆண்டு தகப்பனாருடன் கல்கத்தாவை விட்டுப் புறப்பட்டார்.
1874: அவரின் கவிதையான ‘அபிலாஷ்’ (ஆசை), தட்டோபோதினி என்ற ஒரு பத்திரிகையில் அநாமதேயமாக வெளியிடப்பட்டது.
1875: அவரது தாயார் சாரதா தேவி காலமானார்.
1878: முதல் கவிதைப் புத்தகமான ‘கபி கஹினி’ (ஒரு கவிஞர் கதை)வெளியிடப்பட்டது.
1878: சட்டம் பயில்வதற்காக கடல்வழியாக இங்கிலாந்து சென்றார்
1880: கவிதைகளை ஆராய்வதில் ஆர்வம் காட்டியதால், பட்டம் பெறாமலேயே வங்கத்திற்குத் திரும்பிவிட்டார்.
1883: டிசம்பர் 9ஆம் தேதி, 1883ஆம் ஆண்டில் மிருனாலி தேவி ராய்சௌத்ரி என்ற 10 வயதுப் பெண்ணை மணந்தார்
1884: ‘கோரி-ஓ-கமல்’ (ஷார்ப் மற்றும் பிளாட்) என்ற கவிதைத் தொகுப்பை எழுதினார். 1890:தனது குடும்ப எஸ்டேட்டைப் பார்த்துக்கொள்ள சிலைதஹாவிற்கு (இப்போது வங்காளத்தில் உள்ளது) சென்றார்.
1893–1900: தாகூர் அவர்கள் ஏழு கவிதைத் தொகுதிகளான ‘சொனார் தொரி’ (கோல்டன் படகு) மற்றும் ‘கனிகா’ போன்றவற்றை எழுதியுள்ளார்.
1901: பங்கதர்ஷன் என்ற இதழின் ஆசிரியரானார்.
1902: அவரது மனைவி மிருணாளினி இறந்தார்.
1909:‘கீதாஞ்சலியை’ எழுதத் தொடங்கினார்.
1912: இரண்டாவது முறையாக ஐரோப்பா சென்றார்.
1912: லண்டனில் உள்ள இந்திய சமூகத்தின் ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்பில் கீதாஞ்சலி வெளியிடப்பட்டது.
1913: கீதாஞ்சலிக்கு, இலக்கியத்துக்கான ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது.
1915:ஆங்கிலேய ஜார்ஜ் மன்னர், ‘சர்’ என்னும் வீரப்பட்டம் வழங்கினார்.
1919: ஜாலியன்வாலா பாக் படுகொலையைத் தொடர்ந்து, ஆங்கிலேய ஜார்ஜ் மன்னர்‘சர்’ என்னும் வீரப்பட்டத்தைத் துறந்தார்.
1916 –1934: சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
1921:விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார்.
1940:சாந்திநிகேதனிலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ‘இலக்கிய முனைவர் பட்டம்’ வழங்கப்பட்டது.
1941: கல்கத்தாவிலுள்ள தனது மூதாதையர் வீட்டில் ஆகஸ்ட் 7, 1941 அன்று காலமானார்.
Wednesday, May 10, 2017
PENCIL DRAWING - KARL MARX
PENCIL DRAWING
தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 09-05-2017
PENCIL DRAWING - KARL MARX |
PENCIL DRAWING - KARL MARX |
காரல் மார்க்ஸ்
என் வரைச்சித்திரம், சிந்தனைத்துளிகளுடன் அனைவருக்கும் காலை வணக்கம்...
உழைப்பு தான் எல்லா செல்வங்களுக்கும் மதிப்பளிக்கும் மூலம்.
மக்கள் இன்பமான வாழ்க்கை வாழவேண்டுமா? முதலில் மதங்களை ஒழித்துக் கட்டுங்கள்.
மனிதன் என்பதற்கு மேலான எந்தக் கவுரவமும் இல்லை.
நல்ல குறிக்கோளை அடைவதற்காக தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாகிறது.
உன்னால் எதைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நம்புகிறாயோ அதைத் தீவிரமாகச் செய்து முடிக்க முயற்சி செய். அதுவே வெற்றி பெற உற்ற வழி.
பிழையை எடுத்துக் காட்டாமல் விடுவதானது. அறிவுத் துறையிலே ஒழுக்கமின்மையை ஆதரிப்பதாகும்.
தலைவணங்குவதையும் கெஞ்சுவதையும் நான் பெரிதும் வெறுக்கிறேன்.
மிகப்பெரிய தோல்வியை விடவும் மிகப்பெரும் வெற்றிக்கே நாம் மிகவும் அஞ்ச வேண்டும்.
மதம் மக்களுக்கு அபின்.
விஞ்ஞானம் என்னும் அழியா ஒளி அறியாமை என்னும் திரைக்குப் பின்னே பிரகாசிக்கிறது.
உலகாயதத்தை மனிதனின் மனம் கிரகித்து அதனைச் சிந்தனை வடிவமாக மாற்றுவது தான் எண்ணம் ஆகும்.
ஒருவன் தனக்காக தன்னுடைய வாழ்க்கைக்காக உழைக்கும்போது தான் அசலான மனிதனாகிறான்.
நாம் வீணாகக் கழிக்கும் ஒவ்வொரு நொடியும் நமது வாழ்வில் மீண்டும் நாம் பெற முடியாத பெருஞ்செல்வமாகும்.
மக்களே கலை, இலக்கியம், மொழி ஆகிய அனைத்துக்கும் வித்தும் வீரியமும் சத்தும் சாரமுமாய் இருக்கிறார்கள். அவர்களே வரலாற்றைப் படைக்கிறார்கள்.
நமக்கு முந்தைய தலைமுறை தத்துவ தலைமுறை தத்துவ ஞானிகள் உலகத்தைப் பற்றி வியாக்யானம் செய்தார்கள். ஆனால் தத்துவ ஞானிகளின் உண்மையான வேலை உலகை மாற்றுவதுதான்.
உள்நாட்டில் பல வகுப்பினரிடையே உள்ள வர்க்கப் பகைமை மறைகிற அளவை பொறுத்து. நாடுகளுக்கிடையே உள்ள பகைமையும் ஒரு முடிவுக்கு வந்து விடும்.
மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை. மாற்றங்களை எதிர்கொள்ள மன உறுதி வேண்டும். மாற்றம் என்பதைத் தவிர மாறாதது உலகில் இல்லை.